/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொதுத்தேர்வு ஆசிரியர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு
/
பொதுத்தேர்வு ஆசிரியர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு
ADDED : பிப் 28, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 1ம் தேதி, பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச், 4ம் தேதி தொடங்குகிறது.
பொதுத்தேர்வில்
ஈரோடு மாவட்டத்தில் 1,641 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பணி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு ஏற்கனவே
வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளி கல்வி துறையினர்
கூறியதாவது: அறை கண்காணிப்பாளர்கள், 1,160 பேர், பறக்கும் படை
உறுப்பினர்கள், 375, துறை அலுவலர்கள், 106 பேர் பணியாற்றுவர்.
ஸ்கிரைபர் (சொல்வதை கேட்டு எழுதும் ஆசிரியர்கள்) எண்ணிக்கை இறுதி
செய்யப்படவில்லை.
இறுதி நேர மாற்றத்துக்கும், தேவையான ஆசிரியர்கள் காத்திருப்பில் உள்ளனர். இவ்வாறு கூறினர்.

