sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வம்புக்கு இழுத்து தகராறு; 8 மாணவர்கள் கைது

வம்புக்கு இழுத்து தகராறு; 8 மாணவர்கள் கைது

வம்புக்கு இழுத்து தகராறு; 8 மாணவர்கள் கைது


ADDED : அக் 14, 2025 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2025 02:01 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, பெருந்துறை காடாபாளையத்தை சேர்ந்த ஜெயபால் மகன் துளசிராமன், 19; கடந்த, 2023ல் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்தார். பள்ளக்காட்டூரை சேர்ந்த பாலச்சந்திரன் மகன் ரோகித், 19; இவரும் அதே பள்ளியில் படித்தார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதன் பின் பேசி கொள்ளவில்லை.

தற்போது இருவரும் பெருந்துறையில் வெவ்வேறு கல்லுாரியில் படிக்கின்றனர்.

துளசிராமன் தனது நண்பர்களான, லோகேஷ், 21. வீரமணி, 25. சிவபிரகாஷ், 19, ஆகியோருடன், பெருந்துறை புது பஸ் ஸ்டாண்டில் கடந்த, 10ம் தேதி நின்றிருந்தார்.

அப்போது ரோகித் தனது கல்லுாரி நண்பர்களுடன் வந்தார். இளம்சிறார் ஒருவர் துாண்டுதலின் பேரில் துளசிராமனுடன் ரோகித் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதை லோகேஷ், வீரமணி, சிவபிரகாஷ் தடுக்க முயல, ஆத்திரமடைந்த ரோகித்தின் நண்பர்கள், மூவரையும் கட்டையால் தாக்கினர். காயமடைந்த மூவரும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பெருந்துறை போலீசில் துளசிராமன் அளித்த புகாரின்படி, ரோகித் உள்பட ஒன்பது பேர் மீது வழக்குப்பதிந்து, அனைவரையும் கைது செய்தனர்.

இதில் ஒருவர் மைனர் என்பதால், கோவை இளம் சிறார் நீதி குழுமத்தில் அவரை அடைத்தனர். மற்ற எட்டு பேரும் பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us