ADDED : ஜூலை 09, 2025 01:25 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு, மாணிக்கவாசகர் காலனியில் கழிவு நீர் ஓடையில், ஆண் சடலம் கிடப்பதாக, டவுன் வி.ஏ.ஓ., சதீஸ்குமார் தகவலின்படி, தாலுகா போலீசார் சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்தவருக்கு, 45 வயது இருக்கும். மது போதையில் கழிவு நீர் ஓடை
மோரியில் படுத்திருந்தபோது, தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
