/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டில் பட்டாசு இருப்பு வைத்த 2 பேர் கைது
/
வீட்டில் பட்டாசு இருப்பு வைத்த 2 பேர் கைது
ADDED : ஜன 11, 2026 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: மொடக்குறிச்சி சின்னியம்பாளையம் நால்ரோடு அருகே, வாடகை வீட்டில் இருப்பு வைத்திருந்த பட்டாசு நேற்று முன்-தினம் காலை வெடித்து சிதறியது. இதில் வீட்டின் கூரை சேதமா-னது. மொடக்குறிச்சி போலீசார் விசாரணையில், தீபாவளிக்கு தற்காலிக கடை வைத்தவர்கள், விற்காத பட்டாசுகளை வீட்டில் வைத்திருந்தபோது வெடித்தது தெரியவந்தது.
இது தொடர்பாக பட்டாசு கடை நடத்திய முத்துகவுண்டன்பா-ளையம் ராமகிருஷ்ணன், 38; வாடகை வீட்டின் உரிமையாளர் சின்னியம்பாளையம் முருகேசன், 54, ஆகியோர் மீது, வெடிம-ருந்துகள் கையாளுதல் சட்டப்பிரிவில் வழக்குப்பதிந்து, மொடக்-குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

