/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
/
சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஏப் 15, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம் அருகே சாந்தாங்காட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து, நேற்று பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர்.
பிறகு முதற்கால யாக பூஜை நடந்தது. இன்று இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தனம், மூலமந்திரம் நடக்கிறது. இதை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், கோ பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சக்தி விநாயகர் விழா குழுவினர் செய்துள்ளனர்.

