sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேர்தலை புறக்கணிப்பதாக காராப்பாடியில் போராட்டம்

/

தேர்தலை புறக்கணிப்பதாக காராப்பாடியில் போராட்டம்

தேர்தலை புறக்கணிப்பதாக காராப்பாடியில் போராட்டம்

தேர்தலை புறக்கணிப்பதாக காராப்பாடியில் போராட்டம்


ADDED : மார் 31, 2024 04:20 AM

Google News

ADDED : மார் 31, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர்: நம்பியூர் தாலுகா காராப்பாடி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில் கரட்டுப்பாளையம் 'பி' கிராமம் காரப்பாடியில், 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அரசு வழிகாட்டி மதிப்பீடு வழங்காததால், லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, கிராம மக்கள் வீதிகளில் தடுப்பு மற்றும் பேனர் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடத்துார் போலீசார் மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதை ஏற்காத மக்கள், நம்பியூர் தாசில்தார் அலுவலகத்தில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு அடையாள அட்டைகளை ஒப்படைப்பதாக கூறி, தாலுகா அலுவலகத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நம்பியூர் தாசில்தார் மாலதி, வி.ஏ.ஓ., சண்முகம், மாவட்ட பதிவாளர் பூங்கொடி, நம்பியூர் சார்பதிவாளரிடம் மொபைல்போனில் பேசினர். தேர்தல் முடிவதற்குள் வழிகாட்டி மதிப்பீடு செய்து தரப்படும் என உறுதியளிக்கவே, போராட்டத்தை கைவிட்டு மக்கள் சென்றனர்.






      Dinamalar
      Follow us