ADDED : ஆக 05, 2025 01:18 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை, சென்னிமலை அருகே வேட்டுவப்பாளையத்தை சேர்ந்த வேளாள தம்பிரான் சுவாமி, 101-வது ஆண்டு குருபூஜை விழா, பெருந்துறை அருகேயுள்ள வேளாள தம்பிரான் சுவாமி சமாதியில் நேற்று நடந்தது.
இதையொட்டி சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம், குருபூஜை, திருவீதி உலா நடந்தது. அலங்கரிக்கபட்ட தம்பிரான் சுவாமி உற்சவமூர்த்தி, மடம் மற்றும் கோவிலை சுற்றி பக்தர்களால் சுமந்து வீதியுலா வந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
