நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நுாலகம் திறப்பு
பவானி,
பவானி அருகே பி.மேட்டுப்பாளையம் டவுன் பஞ்.,ல், 22 லட்சம் ரூபாய் மதிப்பில், பொது நுாலக கட்டடம் கட்டப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, காணொலி காட்சியில் நேற்று திறந்து வைத்தார். நுாலத்தில் நடந்த நிகழ்வில் மேட்டுப்பாளையம் டவுன் பஞ்., தலைவர் தனலட்சுமி, நுாலகர் மகேஸ்வரி, தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.

