ADDED : நவ 27, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி நகராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் மாற்றுத்திறனாளி ஒருவர் நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து புன்செய் புளியம்பட்டியை சேர்ந்த சித்ராதேவி என்பவர் நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நியமன உறுப்பினர் சித்ரா தேவிக்கு, நகராட்சி கமிஷனர் கருணாம்பாள் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

