/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை
/
வாராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை
ADDED : நவ 26, 2025 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி யாக பூஜையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
இதையொட்டி வாராகி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.
கோயில் பீடாதிபதி சஞ்சீவி சுவாமிகள் பூஜைகளை நடத்தினார். யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள்மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார்.
பல்வேறு மாவட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர். அன்னதானம் வழங்கப்பட்டது.

