/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு; வியாபாரிகளுக்கு தேவை விழிப்புணர்வு.. பரிதவிக்கும் அப்பாவிகள்
/
10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு; வியாபாரிகளுக்கு தேவை விழிப்புணர்வு.. பரிதவிக்கும் அப்பாவிகள்
10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு; வியாபாரிகளுக்கு தேவை விழிப்புணர்வு.. பரிதவிக்கும் அப்பாவிகள்
10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு; வியாபாரிகளுக்கு தேவை விழிப்புணர்வு.. பரிதவிக்கும் அப்பாவிகள்
ADDED : ஏப் 05, 2024 05:40 AM

2016 ல் மத்திய அரசால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவற்றுக்கு மாற்றாக புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. அந்த நேரத்தில் சிலர் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என தவறான வதந்தியை பரப்பினர். இந்த தவறான வதந்தியால் வியாபாரிகள், பஸ் நடத்துனர்கள் என பலரும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தனர்.
இதை தொடர்ந்து அரசு, வங்கி அதிகாரிகள் அனைத்து வகையான 10 ரூபாய்நாணயங்களும் செல்லும் என தெரிவித்து வந்தனர்.
இதனால் மற்ற மாவட்டங்களில் இந்த நாணயத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க சிலர் மறுத்து வருகின்றனர். இதனால் பிற மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்து பொருட்கள் வாங்கும் போதும், பஸ் பயணங்களின் போதும் நாணயத்தை வாங்க மறுப்பதால் வாக்குவாதம் தொடர்கிறது. 10 ரூபாய் நாணயம் குறித்த தவறான வதந்தியாலும், அறியாமையாலும் பொதுமக்கள் பலர் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.இது குறித்து வியாபாரிகள் முதல் பொதுமக்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பத்து ரூபாய் நாணயம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. மாவட்ட நிர்வாகமும் வழி காண வேண்டும்.

