sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை' மலைப்பகுதியில் காட்டுயானைகள் முகாம் அச்சத்தில் பொதுமக்கள்

/

'கொடை' மலைப்பகுதியில் காட்டுயானைகள் முகாம் அச்சத்தில் பொதுமக்கள்

'கொடை' மலைப்பகுதியில் காட்டுயானைகள் முகாம் அச்சத்தில் பொதுமக்கள்

'கொடை' மலைப்பகுதியில் காட்டுயானைகள் முகாம் அச்சத்தில் பொதுமக்கள்

1


ADDED : நவ 08, 2024 04:36 AM

Google News

ADDED : நவ 08, 2024 04:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாண்டிக்குடி பெரியூரில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பெரியூரில் இரு மாதங்களாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன. தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகளை அச்சுறுத்துகின்றன. இதில் இரு யானைகள் பெரியூர் ஊராட்சி பள்ளத்துகால்வாய், பாறைபட்டி, கவுச்சிகொம்பு, மன்றவயல், நல்லுார் காடு பகுதிகளில் முகாமிட்டுள்ளன. மலைவாழை பயிர்களை துவம்சம் செய்கின்றன. பந்தல் காய்கறிகள், காபி, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பயிர்களும் இவற்றிடமிருந்து தப்பவில்லை. வனத்துறை பெயரளவிற்கு ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

பயிர் சேதத்தை கணக்கிட்டு இழப்பீடு வழங்குவது குறித்து விவரத்தை வனத்துறை சேகரிக்கும் பணியை முதன்மையாக செய்து வருகிறது.

ஆனால் யானைகளை அடர் வனப்பகுதியில் விரட்டும் நடவடிக்கையில் வனத்துறை ஆர்வம் காட்டாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

விவசாயி ஒருவர் கூறியதாவது: புவிசார் குறியீடு பெற்ற மலை வாழை யானை வரவால் அடியுடன் பாதிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் வாகனங்களில் பயணிக்க முடியாத நிலை உள்ளது. விவசாயிகள், வாகன ஓட்டிகளை யானைகள் விரட்டும் போக்குள்ளது. காபி சீசன் துவங்கியுள்ள நிலையில் அச்சத்துடன் தோட்டத்திற்கு செல்கிறோம். விவசாய பணிகளுக்கு கூலியாட்கள் வர தயங்குகிறார்கள். இதனால் மலைப்பகுதியை விடுத்து தரைப்பகுதிக்கு ஏராளமான விவசாயிகள் செல்ல துவங்கி விட்டனர்.

பயிர் சேதத்திற்கும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு கிடைக்காமல் தாமதம் ஏற்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us