/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நான்காவது நாளாக செவிலியர்கள் போராட்டம்
/
நான்காவது நாளாக செவிலியர்கள் போராட்டம்
ADDED : டிச 23, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழக செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதியான எம்.ஆர்.பி., செவிலியர்களுக்கு பணி நிரந்தரம், சம வேலைக்கு, சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 4வது நாளாக நேற்று எம்.ஆர்.பி., செவிலியர்கள் பணிகளைப் புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
எம்.ஆர்.பி., செவிலியர் சங்க பழநி வட்டாரத்தலைவர் கலா தலைமை வகித்தார். கன்னிவாடி வட்டார நிர்வாகி, நித்தியா, பழநி வட்டார பொருளாளர் ராஜேஸ்வரி கலந்துக்கொண்டனர்.

