sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வேண்டாமே மாடி கட்டட வகுப்பறை: பாதுகாப்பில் அலட்சியம்

/

வேண்டாமே மாடி கட்டட வகுப்பறை: பாதுகாப்பில் அலட்சியம்

வேண்டாமே மாடி கட்டட வகுப்பறை: பாதுகாப்பில் அலட்சியம்

வேண்டாமே மாடி கட்டட வகுப்பறை: பாதுகாப்பில் அலட்சியம்


ADDED : ஏப் 18, 2025 06:39 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை பள்ளிக்கூடங்கள் ஓடுக்கூரையிலான வகுப்பறைகளுடன் தரைமட்டத்திலே செயல்பட்டன.

மக்கள் தொகை பெருக்கம், நில மதிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால் பள்ளிகளை விஸ்தரிக்க போதிய இடம் கிடைப்பது என்பது சவாலான விஷயமாக மாறி உள்ளது.

இதனால் அரசு, தனியார் பள்ளிகளில் வகுப்பறைகள் அடுக்கு மாடி கட்டடங்களில் செயல்படும் நிலை அதிகரித்து வருகிறது. ஆனால் ஏராளமான பள்ளிகளில் மேல்மாடியில் உயரம் குறைவான பாதுகாப்பற்ற சுவர்கள் உள்ளன.

இவ்விடங்களில் மாணவர்களுக்குள் ஏற்படும் எல்லை மீறிய விளையாட்டு போன்ற நேரங்களில் மாணவர்கள் கவனக்குறைவாக கீழே விழும் ஆபத்து அதிகம் உள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் அசம்பாவிதங்கள் மாநில, தேசிய அளவில் எதிரொலிக்கும் பிரச்னையாக மாறி விடுகிறது. இருந்தும் இன்றளவிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான பள்ளிகளில் மாடி கட்டடங்களில் இருந்து மாணவர்கள் எளிதில் தவறி விழும் வாய்ப்புள்ள இடங்களாகவே இருக்கின்றன.

மாவட்ட நிர்வாகம் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்த வேண்டும். கோடை விடுமுறை காலத்தில் இதுபோன்ற பணிகளை சிரமமின்றி பள்ளி நிர்வாகங்கள் செய்து முடிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us