/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாசடைந்த காற்றில் சிக்கித்திணறும் கொத்தப்புள்ளி மக்கள் குடிநீர், ரோடு, சுகாதார பிரச்னைகள் தாராளம்
/
மாசடைந்த காற்றில் சிக்கித்திணறும் கொத்தப்புள்ளி மக்கள் குடிநீர், ரோடு, சுகாதார பிரச்னைகள் தாராளம்
மாசடைந்த காற்றில் சிக்கித்திணறும் கொத்தப்புள்ளி மக்கள் குடிநீர், ரோடு, சுகாதார பிரச்னைகள் தாராளம்
மாசடைந்த காற்றில் சிக்கித்திணறும் கொத்தப்புள்ளி மக்கள் குடிநீர், ரோடு, சுகாதார பிரச்னைகள் தாராளம்
UPDATED : டிச 21, 2025 06:05 AM
ADDED : டிச 21, 2025 06:02 AM

ரெட்டியார்சத்திரம்: கொத்தப்புள்ளியில் காற்று மாசு அதிகரிப்பால் பலர் சுவாச பாதிப்புகளில் சிக்கி தவிக்கின்றனர். இப்பகுதியில் குடிநீர், சாக்கடை பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
திண்டுக்கல் -பழனி ரோட்டில் ரெட்டியார்சத்திரத்தை மையமாகக் கொண்டு கொத்தப்புள்ளி உள்ளது. ஊராட்சி ஒன்றியம், போலீஸ் ஸ்டேஷன், வங்கிகள், அரசு அலுவலகங்கள் என தினமும் நுாற்றுக்கணக்கான மக்களின் நடமாட்ட பகுதியாக ரெட்டியார்சத்திரம் உள்ளது. இதனை சுற்றி கொத்தப்புள்ளி, தாதன்கோட்டை, பொம்மனங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் தனியார் கிரஷர்கள் பல இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை உரிய மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இப்பிரச்னையால் ரெட்டியார்சத்திரம் பகுதியில் வசிப்போர் மட்டுமின்றி பல்வேறு அலுவல்களுக்காக இப்பகுதிக்கு வந்து செல்லும் பலரும் மூச்சுத் திணறல், இதய நோய், காது கேட்கும் தன்மை பாதிப்பு போன்ற பிரச்னைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
கொத்தப்புள்ளி சுற்றிய கிராமங்களில் போதிய குடிநீர், ரோடு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. பராமரிப்பின்றி சேதமடைந்த அரசு கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் விபத்துகளை ஏற்படுத்தும் அவல நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாக இப்பிரச்னைகள் தொடர்பாக அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் மனு கொடுத்தல், ஆர்ப்பாட்டம் போன்றவை தொடர்கிறது. ஆனால் இவற்றுக்கான நிரந்தர தீர்வு நிறைவேறாத கனவாக உள்ளது.மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முழுமையாக கண்காணிக்கவும், அடிப்படை பிரச்னைகள் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
வெடி அதிர்வால் வீடுகள் சேதம் தயாளன், 
ரயில்வே ஸ்டேஷன் நீக்கம் ராமச்சந்திரன், பா.ஜ., விவசாய அணி ஒன்றிய தலைவர், 

