நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பம்பட்டி : மானுாரில் 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவி கொட்டியதில் காயம் ஏற்பட்டது.
சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு முழுமையாக 100 நாள் ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ,ஒன்றிய குழு உறுப்பினர் செம்மணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருள் செல்வன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் கனகு கலந்து கொண்டனர்.

