/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குற்றங்களை கண்டறிய, தடுக்க அவசியமாகிறது கேமரா; வெளியூர் சென்றாலும் அலைபேசியில் கண்காணிக்கலாம்
/
குற்றங்களை கண்டறிய, தடுக்க அவசியமாகிறது கேமரா; வெளியூர் சென்றாலும் அலைபேசியில் கண்காணிக்கலாம்
குற்றங்களை கண்டறிய, தடுக்க அவசியமாகிறது கேமரா; வெளியூர் சென்றாலும் அலைபேசியில் கண்காணிக்கலாம்
குற்றங்களை கண்டறிய, தடுக்க அவசியமாகிறது கேமரா; வெளியூர் சென்றாலும் அலைபேசியில் கண்காணிக்கலாம்
ADDED : மார் 27, 2024 06:35 AM

மாவட்டத்தில் நகர , கிராம பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும் கண்காணிப்பு கேமரா முக்கிய பங்காற்றி வருகிறது.
பெரும்பாலும் நகர்ப்புறத்தில் முக்கிய பகுதிகளிலும், சாலைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதனால் குற்றம் நடைபெறும்போது எளிதாக கண்டறிய முடிகிறது. ஆனால் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் உள்ளது.
இதனால் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் கண்டறிவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது.
தனிநபர் வீடு கட்டும்போது வீட்டின் கட்டுமான செலவுடன் வீட்டிற்கு வெளியே கண்காணிப்பு கேமரா பொருத்துவது முக்கியம்.
இதனால் அவர் வீடு, சுற்றுப்புற பகுதி பாதுகாப்பாக இருக்கும். மிகப் பெரிய வணிக வளாகங்கள் மட்டுமன்றி சிறிய கடைகளுக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தி கொள்வது அவசியமாகிறது.
வர்த்தக சங்கத்தினர், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், சமுதாய அக்கறை உள்ள அமைப்புகள் இணைந்து நகரின் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கண்காணிப்பு கேமரா பொருத்த முன்வர வேண்டும். நகர குடியிருப்பு பகுதிகளில் புறநகர் பகுதிகளில் வசிப்போர் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை அவசியமாக்க வேண்டும்.

