ADDED : நவ 15, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர்: ஸ்ரீராமபுரம் ஊராட்சி பூத்தாம்பட்டியில் மளிகை கடை நடத்தி வருபவர் வேலுச்சாமி 71. நேற்று முன்தினம் இரவு, இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், கல்லாவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.
இதேபோல், ஸ்ரீராமபுரம் மெயின் ரோட்டில், மாணிக்கம் என்பவரது பெட்டிக்கடையிலும், அருகிலுள்ள பழனிச்சாமி டீக்கடையிலும் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
பணம் எதுவும் இல்லாததால் திரும்பிச் சென்றுள்ளனர். வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

