/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., பூத் ஏஜன்ட் கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் ஏஜன்ட் கூட்டம்
ADDED : அக் 04, 2025 04:03 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திண்டுக்கல்லில் பூத் ஏஜன்ட் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பூத் கிளைகள் மூலம் செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்த பயிற்சிக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக மாணிக்கம், கவி செல்வம் தங்கம், செல்வகுமார் நியமிக்கப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவம், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜமோகன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாரதிமுருகன், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், வி.டி.ராஜன், சேசு,முரளி, இக்பால், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் வீரமார்பன், தலைவர் கவுதம், பால்ராஜ் பங்கேற்றனர்.

