sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வழிப்பறி செய்த 3 வாலிபர்களுக்கு சிறை

/

வழிப்பறி செய்த 3 வாலிபர்களுக்கு சிறை

வழிப்பறி செய்த 3 வாலிபர்களுக்கு சிறை

வழிப்பறி செய்த 3 வாலிபர்களுக்கு சிறை


ADDED : அக் 23, 2024 07:15 PM

Google News

ADDED : அக் 23, 2024 07:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்;திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரோட்டோரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களை தாக்கி மிரட்டி பணம்,அலைபேசி பறித்த 3

வாலிபர்களுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நத்தம் குமரப்பட்டிபுதுாரை சேர்ந்தவர்கள் அழகேசன்30,அவரது நண்பர்கள் யோகேஸ்வரன்28,வினோத்30. இவர்கள் 2023 மே.15ல் நத்தம் டூ

துவரங்குறிச்சி குமரப்பட்டி பகுதியிலிருக்கும் பாலத்தில் இரவு நேரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த ஹரிதர்சன்26,மதுரை பழங்காநத்தம் ஆகாஷ்20,நத்தம் பரளிபுதுார் அபிமன்யூ22 ஆகியோர்

சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி அழகேசன்,யோகேஸ்வரன்,வினோத் ஆகியோரை தாக்கி அவர்களிடமிருந்த ரூ.2000,அலைபேசிகளை பறித்து வழிப்பறியில் ஈடுபட்டனர். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி,இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து சிறையில்அடைத்தனர்.

இதன்வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளிகள் ஹரிதர்சன்,ஆகாஷ்,அபிமன்யு ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5 ஆயிரம் விதித்து நீதித்துறை நடுவர் கனகராஜ்

தீர்ப்பளித்தார். அரசு தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக குமரேசன் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us