sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை' யில் பசுக்களை திருடி இறைச்சியாக்கி விற்ற 2 பேர் கைது

/

'கொடை' யில் பசுக்களை திருடி இறைச்சியாக்கி விற்ற 2 பேர் கைது

'கொடை' யில் பசுக்களை திருடி இறைச்சியாக்கி விற்ற 2 பேர் கைது

'கொடை' யில் பசுக்களை திருடி இறைச்சியாக்கி விற்ற 2 பேர் கைது


ADDED : அக் 04, 2024 06:52 AM

Google News

ADDED : அக் 04, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானலில் ரோட்டில் சுற்றி திரிந்த பசுக்களை திருடி இறைச்சியாக கடையில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

கொடைக்கானலை சேர்ந்த செந்தமிழ்செல்வி, மருதுபாண்டி, பாலகிருஷ்ணன் தங்களது வளர்ப்பு மாடுகள் மாயமானது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து காந்திபுரத்தை சேர்ந்த முருகனின் பசு மாயமானது. கொடைக்கானல் போலீசார் தனிக் குழு அமைத்து விசாரித்தனர். சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தததில் ரோட்டில் கயிறுடன் சென்ற மாட்டை விரட்டி பிடிக்கும் நபர்கள் பதிவாகினர். தொடர் விசாரணையில் கொடைக்கானல் காமராஜர் சாலையை சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் முகமது அசாருதீன் 36, தாண்டிக்குடி குப்பம்மாள்பட்டியை சேர்ந்த உதவியாளர் மருதுபாண்டி 35, என்பதும் மாடுகளை கொன்று இறைச்சியாக விற்றது தெரியவர இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us