/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கஞ்சா வழக்கில் ஒருவர் கர்நாடகாவில் கைது
/
கஞ்சா வழக்கில் ஒருவர் கர்நாடகாவில் கைது
ADDED : ஏப் 26, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா போலீசார் 2019ல் சாமியார்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சாமியார்பட்டியில் தகர செட் அமைத்து கஞ்சாவை பதுக்கி வைத்த அதே பகுதியைச் சேர்ந்த போஸ் உள்பட 7 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 213 கிலோ கஞ்சா, சரக்கு வேன், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் தேனி கம்பத்தை சேர்ந்த சிவா 33, என்பவர் தேடப்பட்டார். அவர் கர்நாடக மாநிலம் சிக்பல்புரா மாவட்டம் கவுரிபிதானுர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. போலீசார் சிவாவை நேற்று கைது செய்தனர்.

