sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

எங்கும் போதைப்பொருள் விற்பனை பா.ம.க., போராட்ட எச்சரிக்கை

/

எங்கும் போதைப்பொருள் விற்பனை பா.ம.க., போராட்ட எச்சரிக்கை

எங்கும் போதைப்பொருள் விற்பனை பா.ம.க., போராட்ட எச்சரிக்கை

எங்கும் போதைப்பொருள் விற்பனை பா.ம.க., போராட்ட எச்சரிக்கை


ADDED : மே 23, 2024 04:00 AM

Google News

ADDED : மே 23, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ''தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டு எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை தாராளமாக நடப்பதாக'' பா.ம.க., பொருளாளர் திலகபாமா தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டு விட்டது.

எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதைப் பொருள் விற்பனை தாராளமாக நடக்கிறது. அனுமதி இல்லா மதுபான பார்கள் இயங்கி வருகின்றன.

மனமகிழ் மன்றம் பெயரில் சீட்டு விளையாட்டு கிளப் ஒவ்வொரு பகுதிகளிலும் பெருகிவிட்டது.

யாரிடம் புகார் அளித்தாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.

மணலைக் கொள்ளையடித்து ஆறுகளையும், நீர் நிலைகளையும் முற்றிலும் அழித்து வருகின்றனர்.

தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பிறகு போதை பொருளை விற்பனை தடுக்கும் வகையிலும் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து வரும் தமிழக அரசை கண்டித்தும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் .

நிலக்கோட்டை அருகே நடந்த கொலையை வி.சி.க., சில அமைப்புகள் சாதிய மோதலாக உருவாக்க முயன்றனர்.

ஆனால் போலீசார் மிக சிறப்பாக செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளை கைது செய்து பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது பாராட்டத்தக்கது என்றார்.






      Dinamalar
      Follow us