ADDED : ஆக 21, 2024 08:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை, : - சிறுகுடி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கல்குவாரி அமைப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் தலைமை வகித்தார்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் குணசேகரன், தாசில்தார் சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.
சிறுகுடி தேத்தாம்பட்டி பகுதியில் புதிதாக அமைய உள்ள வெள்ளைக்கல் குவாரி குறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் விவசாயிகள்,சமூக ஆர்வலர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

