ADDED : மே 17, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 8500 மாதிரிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 2024--25ம் ஆண்டிற்கான மண் மாதிரிகள் சேகரித்தல் இலக்கு வட்டார வாரியாக நிர்ணயக்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் 60 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு கிராமத்திற்கு 100 மண் மாதிரி வீதம் 6,000 மாதிரிகள் , தேர்வு செய்யப்படாத இதர கிராமங்களில் 2500 மண் மாதிரிகள் என 8500 மண் மாதிரிகள் இலக்காக கொண்டு சேகரிக்கப்பட உள்ளது.
இதற்கான நிதி ஒதுக்கீடாக ரூ.25.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

