sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தூய்மை பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

/

தூய்மை பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

தூய்மை பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

தூய்மை பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 07, 2024 06:49 AM

Google News

ADDED : மார் 07, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி : தர்மபுரியில், மாவட்ட முனிசிபல் பஞ்சாயத்து, பொது பணியாளர்கள் சங்கம், ஊராட்சி, பேரூராட்சி, டேங்க் ஆப்பரேட்டர், துாய்மை பணியாளர் சம்மேளனம், உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தர்மபுரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். இதில், பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள், டேங்க் ஆப்பரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம் தருவதில், ஊதியம் வழங்க தமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். பேரூராட்சியில் பணியாற்றும் துாய்மை காவலர்களுக்கு, பணி பதிவேடு வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்கள் மற்றும் டேங்க் ஆப்பரேட்டர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும்.

மேலும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், எ.ஐ.டி.யூ.சி., மாநில துணைத்தலைர் மணி, விவசாய தொழிலாளர் சங்க, மாநில செயலாளர் பிரதாபன் உள்பட பலர், கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us