/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விவசாய தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு
/
விவசாய தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு
ADDED : டிச 17, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், டிச. 17-
அரூர் அடுத்த மேல்செங்கப்பாடியை சேர்ந்தவர் விவசாயி அன்பு, 46, அவரது மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில், மலைப்பாம்பு ஒன்று
புகுந்துள்ளது. அதுகுறித்து, தீர்த்தமலை வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு நேற்று காலை, 9:00 மணிக்கு வந்த வனத்துறையினர் விவசாய தோட்டத்தில் பதுங்கியிருந்த, 12 அடி நீள மலைப்பாம்பை
பிடித்தனர்.
இதை சுற்றுவட்டார மக்கள் ஆர்வமாக பார்த்துச் சென்றனர்.
பிடிபட்ட மலைப்பாம்பு, வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.

