/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 06, 2026 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.
தர்மபுரி மாவட்ட அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா தலைமை வகித்தார்.
இதில், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 7,850 ரூபாய் அகவிலை படியுடன் வழங்க வேண்டும். மருத்துவ படி, 300 ரூபாய் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம், இலவச மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதியாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். பண்டிகை கால முன்பணமாக, 6,000 ரூபாய் வழங்க வேண்டும். உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

