/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு
/
ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு
ADDED : ஜன 27, 2026 03:58 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் ரயில்வே போலீசார் பேச்சுவார்த்தையால் ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் செந்துார் மற்றும் பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும், ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் சார்பில், இன்று 27ம் தேதி ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதைதொடர்ந்து பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில், பயணியர் நலச்சங்க தலைவர் அருள்முருகன், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் மோகன், காங்., சையது அலி, கவுஸ் உள்ளிட்ட நிர்வாகிகளுடன், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராமர்சுடலை, சிதம்பரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
கூட்டத்தில், ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பது, பிப்., 4ம் தேதி சிதம்பரத்தில் ரயில்வே அதிகாரிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

