sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாசிமக பிரம்மோற்சவத்தில் சிம்பிளாக முடிந்த நிகழ்ச்சிகள்; அதிகாரிகள் மீது பக்தர்கள் அதிருப்தி

/

மாசிமக பிரம்மோற்சவத்தில் சிம்பிளாக முடிந்த நிகழ்ச்சிகள்; அதிகாரிகள் மீது பக்தர்கள் அதிருப்தி

மாசிமக பிரம்மோற்சவத்தில் சிம்பிளாக முடிந்த நிகழ்ச்சிகள்; அதிகாரிகள் மீது பக்தர்கள் அதிருப்தி

மாசிமக பிரம்மோற்சவத்தில் சிம்பிளாக முடிந்த நிகழ்ச்சிகள்; அதிகாரிகள் மீது பக்தர்கள் அதிருப்தி


ADDED : பிப் 27, 2024 11:51 PM

Google News

ADDED : பிப் 27, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலத்தில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம் விமர்சையாக நடந்து முடிந்தது. 11 நாட்கள் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பாக நடந்த திருவிழாவில், ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்படும் கோவில் என்பதால், ஆண்டுதோறும் விசேஷமாக நடப்பது வழக்கம்.

இதற்காக, உற்சவ உபயதாரர்கள் மூலம் தமிழகத்தின் பிரபலமான பட்டிமன்ற பேச்சாளர்களை வைத்து, நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மாலை 6:00 மணிக்கு மேல் துவங்கும் கலை நிகழ்ச்சிகள், நள்ளிரவு வரை தொடரும். சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு வந்து, ஆன்மிக நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து செல்வர்.

ஆனால், இந்தாண்டு பிரபலமான நபர்கள் வருகை ஏதும் இல்லாமல், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நிரந்தர உண்டியல், திருவிழா சிறப்பு உண்டியல் என பக்தர்களின் காணிக்கையை கொண்டு நிகழ்ச்சிகளை வெகு விமர்சையாக நடத்தி இருக்கலாம்.

திருவிழாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பிரபலங்கள் வருகை இல்லாமல் அறநிலையத் துறையினர் எளிமையாக முடித்து விட்டனர். இதனால் விருத்தாசலம் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us