sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆர்.எஸ்.எஸ்., பேரணி பொதுக்கூட்டம்: போலீசார் குவிப்பு

/

ஆர்.எஸ்.எஸ்., பேரணி பொதுக்கூட்டம்: போலீசார் குவிப்பு

ஆர்.எஸ்.எஸ்., பேரணி பொதுக்கூட்டம்: போலீசார் குவிப்பு

ஆர்.எஸ்.எஸ்., பேரணி பொதுக்கூட்டம்: போலீசார் குவிப்பு


ADDED : அக் 07, 2024 07:03 AM

Google News

ADDED : அக் 07, 2024 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஆர்.எஸ்.எஸ்., அணி வகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சிதம்பரத்தில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில், அகல்யாபாய் ஹோல்கரின் 300வது ஆண்டு, அருட்பிரகாச வள்ளலாரின் 200 ஆண்டு நிறைவு மற்றும் சுவாமி சகஜானந்தரின் 133 ஆண்டு நிறைவு விழா, ஆகிய முப்பெரும் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி, நேற்று மாலை ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின்சீருடை அணிவகுப்பு பேரணி நடந்தது. சிதம்பரம் ரயில் நிலையம் அருகிலிருந்து புறப்பட்ட பேரணியை கோவை, மாதேஷ் மகா சமஸ்தானம் யுத்தேஸ்வர் சுவாமிகள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின் பேரணி எஸ்.பி.,கோயில்தெரு வழியாக சபாநாயகர் தெரு, வெல்லப்பிறந்தான் தெரு வழியாக சென்று தெற்குரதவீதி, படித்துறை இறக்கம் வழியாகபோல் நாராயணன் தெருவில் முடிந்தது.

பின் நடந்த பொதுக்கூட்டத்திற்கு, தொழிலதிபர் ராமநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வராஜ் வரவேற்றார். வழக்கறிஞர் தண்டபாணி முன்னிலை வகித்தார்.

இதில் கோவை மாதேஷ் மகா சமஸ்தானம் யுத்தேஸ்வர் சுவாமிகள் பங்கேற்று, 'தற்கால சூழலில் இந்துத்துவா' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினார். தொடர்ந்து சமூதாய நல்லிணக்க பேரவை மாநில நிர்வாகி ஐயப்பன் சிறப்புறையாற்றினார். நகர பொறுப்பாளர் சிவகுரு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us