/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறிஞ்சிப்பாடி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
/
குறிஞ்சிப்பாடி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
குறிஞ்சிப்பாடி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
குறிஞ்சிப்பாடி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
ADDED : ஏப் 10, 2025 01:22 AM
கடலுார் : குறிஞ்சிப்பாடி சிங்கபுரி விழப்பள்ளம் சுப்ரமணியசுவாமி கோவிலில், நாளை பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.
குறிஞ்சிப்பாடி சிங்கபுரி விழப்பள்ளம் சுப்ரமணியசுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு திருவீதியுலா நடந்தது.
ஒன்பதாம் நாள் திருவிழாவான இன்று விநாயகர், சண்டிகேஸ்வரர், சுப்ரமணியசுவாமி, சிவகாமி அம்மாள் சமேத நடராஜர் பஞ்சமூர்த்திகள் மாலை 3மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அருள்பாலிக்கும் தேர் திருவிழா நடக்கிறது. நாளை பங்குனி உத்திர விழா நடக்கிறது.
பூஜைகளை பரம்பரை அர்ச்சகர்கள் சரவணன், கணபதி, சவுந்தர்ராஜன், சச்சிதானந்தம் செய்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

