/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளியில் கூடுதல் கட்டடம் திறப்பு
/
பள்ளியில் கூடுதல் கட்டடம் திறப்பு
ADDED : டிச 22, 2025 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் பள்ளியில் கூடுதல் கட்டடங்கள் திறக்கப்பட்டன.
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி துவக்கப் பள்ளியில், ரூ. 30 லட்சம் மதிப்பில்
கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. சேர்மன் ஜெயந்தி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
துணைத்தலைவர் கிரிஜா, கமிஷ்னர் கிருஷ்ணராஜன், இன்ஜினியர் கண்ணன், கவுன்சிலர் செல்வகுமார், தி.மு.க., இளைஞரணி துணை செயலாளர் ராஜா, வி.சி., நகர செயலாளர் திருமாறன், தலைமையாசிரியை சகாயமேரி உடனிருந்தனர்.

