ADDED : மார் 11, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம், : மந்தாரக்குப்பம் அடுத்த ரோமாபுரி மேம்பாலம் அருகே பைக்கில் சென்றவர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
ஸ்ரீமுஷ்னம் அடுத்த கீழப்பாலையூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 40. இவர் நேற்று முன்தினம் மாலை தனது பைக்கில் கடலுார் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை ரோமாபுரி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக சென்ற அரசு பஸ் பைக் மீது மோதியது.
இதில் பஸ் சக்கரத்தில் சிக்கி பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

