/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மத்திய சிறையில் மொபைல் போன் பறிமுதல்
/
கடலுார் மத்திய சிறையில் மொபைல் போன் பறிமுதல்
ADDED : மார் 04, 2024 12:29 AM
கடலுார் : கடலுார் மத்திய சிறையில் கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவதாக சிறப்பு சோதனை குழுவிற்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், கடந்த 1ம் தேதி, கைதிகள் மற்றும் சிறை வளாகம் முழுதும் சிறப்பு குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, வெளிச்சிறையின் 2வது அறை கழிவறை தொட்டி அருகில் பதுக்கி வைக்கப்பட்ட விலை உயர்ந்த மொபைல் 1, பேட்டரி 5, சார்ஜர், டேட்டா கேபிள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சிறை அலுவலர் ரவி நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இதேப் போன்று கடந்த 1ம் தேதி சிறையில் மொபைல் போன் பதுக்கி வைக்கப்பட்டதாக தஞ்சாவூரைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி நார்தாடி பாஸ்கர், 37; என்பவர் மீது முதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

