
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : குறிஞ்சிப்பாடி எஸ்.கே.எஸ்.,நகர் ஆனந்த விநாயகர் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.
குறிஞ்சிப்பாடி எஸ்.கே.எஸ்.,நகர் ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, நேற்று பொதுமக்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குறிஞ்சிப்பாடி மாரியம்மன் கோவிலில் இருந்து முந்நாறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
பின், ஆனந்த விநாயகருக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

