/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'பொது அறிவு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு'
/
'பொது அறிவு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு'
ADDED : செப் 07, 2025 07:37 AM

புவனகிரி : 'தினமலர்' அனைவருக்குமான நாளிதழ் என, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் செந்தில்வேலன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
'தினமலர்' நாளிதழ் மிகப்பெரிய பொக்கிஷம். அரசியல், அறிவியல், ஆன்மிகம், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பொது தகவல்கள் வழங்குவது பெருமையாக உள்ளது. வருங்கால சமுதாயம் சிறந்து விளங்க ஒரு உந்து சக்தியாகவும் விளங்குகிறது.
பத்திரிகையில் எழுத்து புரட்சி உருவாக்கிய டி.வி.ராமசுப்பையர் மிகச்சிறந்த மாமனிதர். 'தினமலர்' நாளிதழ் 75ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'தினமலர்' நாளிதழ் மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்.
சிறுவர் மலர், ஆன்மிக மலர் மற்றும் வாரமலர் இ தழ்களில் சிறப்பு வாய்ந்த தகவல்கள் கிடைக் கிறது.
இளைஞர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள பயனுள்ளதாக உள்ளது.