sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலூர், சிதம்பரத்தில் வேட்பு மனு தாக்கல்... துவங்கியது; யாரும் வராததால் அலுவலகங்கள் 'வெறிச்'

/

கடலூர், சிதம்பரத்தில் வேட்பு மனு தாக்கல்... துவங்கியது; யாரும் வராததால் அலுவலகங்கள் 'வெறிச்'

கடலூர், சிதம்பரத்தில் வேட்பு மனு தாக்கல்... துவங்கியது; யாரும் வராததால் அலுவலகங்கள் 'வெறிச்'

கடலூர், சிதம்பரத்தில் வேட்பு மனு தாக்கல்... துவங்கியது; யாரும் வராததால் அலுவலகங்கள் 'வெறிச்'


ADDED : மார் 21, 2024 07:50 AM

Google News

ADDED : மார் 21, 2024 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கிய நிலையில் கடலுார், சிதம்பரம் தொகுதியில் மனு தாக்காலுக்கு யாரும் வராததால், அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் லோக் சபா தேர்தல் வரும் ஏப்.,19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று 20ம் தேதி துவங்கி, வரும் 27ம் தேதி வரை நடக்கிறது.

கடலுார் லோக் சபா தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய கடலுார் கலெக்டர் அலுவலகம் மற்றும் கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகம் ஆகிய இரு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ., அபிநயா மனுக்களை பெறுகின்றனர்.

அதேபோன்று சிதம்பரம் தொகுதிக்கு, அரியலுார் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. சிதம்பரம் தொகுதி தேர்தல் அலுவலரான, அரியலுார் கலெக்டர் ஆனிமேரி சொர்ணா மனுக்களை பெறுகிறார்.

வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியதையடுத்து, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. கடலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அபிநயா இருவரும் தங்கள் அலுவலங்களில் மனு பெற தயாராக இருந்தனர்.

இரு அலுவலகங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்களை போலீசார் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர்.

அரசு அலுவலர்களிடம் அடையாள அட்டை மற்றும் கலெக்டர் அலுவலகம் செல்வதற்கான காரணங்களை கேட்டு அறிந்து போலீசார் அனுப்பினர். இதனால், கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

காலை 11:00 மணி முதல் மாலை 3:00 வரையில் மனு தாக்கல் செய்ய நேரம் அறிவிக்கபட்டிருந்த முதல் நாளான நேற்று, ஒருவரும் மனு தாக்கல் செய்ய வரவில்லை.

இதனால், கடலுார் மற்றும் சிதம்பரத்தில் வேட்பு மனுதாக்கல் அலுவலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆனால், கடலுார் கலெக்டர் அலு்வலகத்தில், 19 வேட்பு மனுக்கள் மட்டும் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சையாக போட்டியிட நேற்று பெற்று சென்றனர்.






      Dinamalar
      Follow us