/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மதுவில் எலி மருந்து கலந்து குடித்து விவசாயி தற்கொலை
/
மதுவில் எலி மருந்து கலந்து குடித்து விவசாயி தற்கொலை
மதுவில் எலி மருந்து கலந்து குடித்து விவசாயி தற்கொலை
மதுவில் எலி மருந்து கலந்து குடித்து விவசாயி தற்கொலை
ADDED : பிப் 27, 2024 10:27 PM
சேத்தியாத்தோப்பு, - சேத்தியாத்தோப்பு அருகே மதுவில் எலி மருந்து கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த சின்னகுப்பத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன், 65; விவசாயி. சர்க்கரை வியாதி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால், மனமுடைந்த அவர், கடந்த 24ம் தேதி மாலை மதுவில் எலி மருந்தை கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

