
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்,: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் வேதியியல் மன்ற விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார். வேதியியல் துறை தலைவர் சியாமளா, வரவேற்றார்.
முன்னாள் நகராட்சி சேர்மன் வள்ளுவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 'ஆரோக்கியமான மாணவர்களே தேசத்தின் சொத்து' என்ற தலைப்பில் பேசினார். மேலும், இளம் வயதில் ரத்தசோகை ஏற்படும் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதில், வேதியியல் துறை மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

