/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ்சின் முன் விழுந்து ஆண் நபர் தற்கொலை
/
பஸ்சின் முன் விழுந்து ஆண் நபர் தற்கொலை
ADDED : மார் 19, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
: கடலுார் பஸ் நிலையத்தில் புறப்பட்ட பஸ்சின் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டவர் குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் பஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் அரசு பஸ் வந்தது. பயணிகளை இறங்கிய பின் பஸ் புறப்பட்டபோது, அங்கு நின்றிருந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் திடீரென பஸ் முன் விழுந்தார். அவர் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

