sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருத்தாசலம் சாலையில் சுகாதார சீர்கேடு

/

விருத்தாசலம் சாலையில் சுகாதார சீர்கேடு

விருத்தாசலம் சாலையில் சுகாதார சீர்கேடு

விருத்தாசலம் சாலையில் சுகாதார சீர்கேடு


ADDED : ஏப் 30, 2024 05:49 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் புறவழிச்சாலையில், இறச்சி கழிவுகள் கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

விருத்தாசலம் நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து மணவாளநல்லுார் ஊராட்சி எல்லை வரை கடந்த 2011ம் ஆண்டில் புறவழிச்சாலை போடப்பட்டது.

அதுபோல், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், கடலுார் மார்க்கத்தில், குப்பநத்தம் கிராம சாலையில் இருந்து ஆலடி ரோடு முகப்பு வழியாக உளுந்துார்பேட்டை சாலை வரை புதிய புறவழிச்சாலை போடப்பட்டது.

ஆனால், புறவழிச்சாலைகளில் இறைச்சி கழிவுகள், குப்பைகள், கட்டட கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இதனால் சாலையின் இருபுறமும் கழிவுகள் குவிந்து கோபுரம் போல காட்சியளிக்கின்றன. மேலும் இறந்த நாய், பூனை, எலிகள், பன்றிகளை இழுத்து வந்து வீசிச் செல்கின்றனர்.

இதனால் புறவழிச்சாலைகளில் எந்த நேரமும் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் முகம் சுழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

வாகனங்கள் எளிதில் சென்று வர புறவழிச்சாலை போடப்பட்டாலும், கழிவுகள் குவியும் பகுதியாகவே மாறியுள்ளது. நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டதால் நாய்கள், பன்றிகள் அதிகளவு உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது.

எனவே, புறவழிச்சாலைகளில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us