ADDED : ஏப் 16, 2024 10:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு,- நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சி.என்.பாளையம் மாதாகோவில் தெருவிற்கு கடந்த சிலநாட்களாக குடிநீர் சரிவர வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 7:30 மணிக்கு சிஎன்.பாளையம் -பண்ருட்டி சாலையில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறிலில் ஈடுபட்டனர்.
நடுவீரப்பட்டு போலீசார் மறியலில் ஈடுபட்டவர் களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.அதையடுத்து, 7:45 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது.

