sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில்வே கேட் அருகே தீ விபத்து விருத்தாசலத்தில் பரபரப்பு

/

ரயில்வே கேட் அருகே தீ விபத்து விருத்தாசலத்தில் பரபரப்பு

ரயில்வே கேட் அருகே தீ விபத்து விருத்தாசலத்தில் பரபரப்பு

ரயில்வே கேட் அருகே தீ விபத்து விருத்தாசலத்தில் பரபரப்பு


ADDED : ஏப் 08, 2024 06:00 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ரயில் தண்டவாளம் அருகே குப்பை கழிவுகள் தீப்பிடித்து எரிந்ததால், பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் அருகே நாச்சியார்பேட்டை ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் அருகே உள்ள எறுமனுார் புறவழிச்சாலையோரம் குப்பை கழிவுகள் குவியலாக கொட்டி கிடக்கின்றன. இந்நிலையில், நேற்று மர்ம முறையில் இந்த குப்பை கழிவுகள் தீ பிடித்து எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது.

விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். தகவல் அறிந்த விருத்தாசலம் தீயணைப்பு துறையினர், அரைமணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதன்பின், குப்பை கழிவுகளை தண்டவாளம் அருகே கொட்டக்கூடாது என அப்பகுதியில் வசிக்கும் மக்களை ரயில்வே போலீசார் எச்சரித்து சென்றனர்.






      Dinamalar
      Follow us