sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போக்குவரத்திற்கு இடையூறு ஆக்கிரமிப்புகள்... அகற்றப்படுமா; கடலுார் மாநகர பொதுமக்கள் எதிர்பார்ப்பு

/

போக்குவரத்திற்கு இடையூறு ஆக்கிரமிப்புகள்... அகற்றப்படுமா; கடலுார் மாநகர பொதுமக்கள் எதிர்பார்ப்பு

போக்குவரத்திற்கு இடையூறு ஆக்கிரமிப்புகள்... அகற்றப்படுமா; கடலுார் மாநகர பொதுமக்கள் எதிர்பார்ப்பு

போக்குவரத்திற்கு இடையூறு ஆக்கிரமிப்புகள்... அகற்றப்படுமா; கடலுார் மாநகர பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஜூலை 29, 2024 04:55 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் நகரில் பெருகி வரும் ஆக்கிரமிப்புகளால் தினம் தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலுார் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. புதுச்சேரி மாநில எல்லையில் இருந்து கடலுார் முதுநகர் வரை மாநகராட்சி எல்லை பரவியுள்ளது. மாநகரத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இது தவிர சுற்றுப்பகுதில் உள்ள கிராமங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநகராட்சிக்குள் வந்து செல்கின்றனர்.

இதற்கிடையே மாநகராட்சியை சுற்றியுள்ள 18 கிராமங்கள் மாநகராட்சியுடன் இணைக்கும் முயற்சி வேகமாக நடந்து வருகிறது.

புதுச்சேரியில் இருந்து தென் மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருச்சி, ராமேஸ்வரம், காரைக்கால், கன்னியாகுமரி உள்ளிட்ட பல முக்கிய ஸ்தலங்களுக்கு செல்லும் பஸ் கடலுார் வழியாகத்தான் செல்கிறது.

இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் பல முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடியை கடலுார் மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக லாரன்ஸ் ரோட்டில் வாகனங்கள் செல்லவே முடியவில்லை. தேரடித்தெருவில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடமில்லாததால் சாலையிலேயே நிறுத்தப்படுகிறது. இந்த சாலை முழுவதும் கடைகள் தான் உள்ளன.

ஒவ்வொரு கடைக்காரரும் தமது கடை முன்பு வாகனங்கள் நிறுத்தாவண்ணம் ஏதாவது ஒரு இரும்பு படல் கொண்டு தடுப்பு ஏற்படுத்தி வைக்கின்றனர்.

சின்னவானித் தெருவில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

கடலுார் முதுநகர் சாலை மணிக்கூண்டு அருகே காலை நேரத்தில் சாலையின் இருபுறமும் மீன் கடைகளால் போக்குவரத்து இடையூறால் வாகனங்கள் செல்ல மிகவும் கடினமாக

உள்ளதால் போலீசார் கடைக்காரர்களிடம் மல்லு கட்ட வேண்டியுள்ளது. மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் இரு புறமும் ஆக்கிரமிப்பினால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.

இது ஒரு புறமிருக்க, அகலமான சாலையிலும் ஆங்காங்கே அனுமதியின்றி நகராட்சி பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக சப் ஜெயில் ரோடு, பழைய கலெக்டர் அலுவலக சாலை உள்ளிட்ட பல இடங்களில் இது போன்ற ஆக்கிரமிப்புகள் பெருகி வருகின்றன.

இதை தட்டிக்கேட்க வேண்டிய மாநகராட்சி 'கப்சிப்' என வாய்மூடி மவுனம் சாதித்து வருகிறது.

இந்நிலையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி கமிஷனர் ஆக்கிரமிப்புகளை படிப்படியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us