sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி 27ல் சம்பளம் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் முடிவு

/

 தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி 27ல் சம்பளம் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் முடிவு

 தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி 27ல் சம்பளம் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் முடிவு

 தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி 27ல் சம்பளம் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் முடிவு


ADDED : டிச 22, 2025 05:17 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: எஸ்டேட் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி வரும், 27ல் சம்பளம் வழங்க முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

வால்பாறையில் தனியார் தேயிலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு, இருதரப்பு பேச்சு வார்த்தை படி, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தினக்கூலியாக, 475 ரூபாய் வழங்கப்படுகிறது. ஏ.பி.ஏ., உறுப்பினர் தோட்டங்களில் மட்டுமே இந்த சம்பளம் வழங்கப்படுகிறது. மற்ற, 10 எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இன்று வரை ஒப்பந்தப்படி சம்பளம் வழங்கவில்லை.

நிலுவைத்தொகையுடன் சம்பளம் வழங்க கோரி, வால்பாறை மற்றும் நீலகிரியில் இரண்டு கட்டமாக போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன.

இந்நிலையில் இது தொடர்பான பேச்சு வார்த்தை கோவையில் நேற்று முன்தினம் நடந்தது. கோவை தொழிலாளர் துறை துணை ஆணையாளர் ராஜ்குமார் முன்னிலையில் தொழிற்சங்கத்தினர், தோட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர்.

அதில், தொழிற்சங்கங்களின் சார்பில் அமீது (ஏ.டி.பி.,) சவுந்திரபாண்டியன், வினோத் (எல்.பி.எப்.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,), கேசவமருகன் (வி.சி.,), கல்யாணி(எம்.எல்.எப்.,) உள்ளிட்ட 11 தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில் 5 நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொழிற்சங்க தலைவர் அமீது கூறியதாவது:

ஒப்பந்தப்படி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க சில நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. மீதமுள்ள நிறுவனங்கள், வரும், 27ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என தொழிலாளர் துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

அறிவித்தபடி சம்பளம் வழங்காவிட்டால் தொழிலாளர் துறை துணை ஆணையாளர் சாந்தி முன்னிலையில், வரும், 27ல் மீண்டும் பேச்சு நடத்தப்படும். ஒப்பந்தபடி, ஆண், பெண் தொழிலாளர்களுக்கு, 16,440 ரூபாய் நிலுவைத்தொகை வழங்க வேண்டும். பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படுத்தாவிட்டால், கோவை மாவட்டம் வால்பாறை, நிலகிரி மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு, கூறினார்.






      Dinamalar
      Follow us