sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மாணவர்களுக்கு இன்று சத்துணவு கிடைக்குமா?

/

 மாணவர்களுக்கு இன்று சத்துணவு கிடைக்குமா?

 மாணவர்களுக்கு இன்று சத்துணவு கிடைக்குமா?

 மாணவர்களுக்கு இன்று சத்துணவு கிடைக்குமா?


ADDED : ஜன 20, 2026 05:01 AM

Google News

ADDED : ஜன 20, 2026 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: காலமுறை ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று முதல் சத்துணவு மையங்களை மூடிவிட்டு காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மாவட்டத்தில் 35 ஆயிரம் மாணவர்கள், சத்துணவு சாப்பிடுகின்றனர். சத்துணவு ஊழியர்களின் போராட்ட அறிவிப்பால், மாணவர்களுக்கான மதிய உணவு தயாரிப்பில், சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சத்துணவு அமைப்பாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இருப்பினும், சமையலர், உதவியாளர்கள் மூலம் பணிகள் தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உணவு தடைபடாமல் வழங்கப்படும்' என்றார்.

இருந்தபோதிலும், இன்று தங்கள் குழந்தைகளுக்கு உணவு தயாரித்து கொடுத்து விட வேண்டியது பெற்றோரின் கடமை.






      Dinamalar
      Follow us