sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 உக்கடம் முதல் கரும்புக்கடை வரை இதென்ன இவ்வளவு ஆக்கிரமிப்பு! கண்டுகொள்ளாத போலீசாரால் விபத்து அபாயம்

/

 உக்கடம் முதல் கரும்புக்கடை வரை இதென்ன இவ்வளவு ஆக்கிரமிப்பு! கண்டுகொள்ளாத போலீசாரால் விபத்து அபாயம்

 உக்கடம் முதல் கரும்புக்கடை வரை இதென்ன இவ்வளவு ஆக்கிரமிப்பு! கண்டுகொள்ளாத போலீசாரால் விபத்து அபாயம்

 உக்கடம் முதல் கரும்புக்கடை வரை இதென்ன இவ்வளவு ஆக்கிரமிப்பு! கண்டுகொள்ளாத போலீசாரால் விபத்து அபாயம்


ADDED : டிச 23, 2025 05:07 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உக்கடம்: உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை கட்டியுள்ள மேம்பாலத்தில் பாலக்காடு ரோடு, போத்தனுார் ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோட்டில் இருந்து வருவோர் பயணிக்கின்றனர். உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கி வருவோர், மேம்பாலத்தை தவிர்த்து சாலை மார்க்கமாகவே செல்கின்றனர்.

உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை வரை, ரோட்டின் இடதுபுறத்தில் மழை நீர் வடிகால் மீது போட்டுள்ள நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளமான தள்ளுவண்டி கடைகள் நடத்தப்படுகின்றன. நாளுக்கு நாள் கடைகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.

பொருட்கள் வாங்க வருவோர், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வரும்போது, 'பீக் ஹவர்ஸ்' சமயத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. விபத்து அபாயமும் உள்ளது.

ஆக்கிரமிப்பை போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். நாளடைவில் இத்தகைய ஆக்கிரமிப்புகள் அதேயிடத்தில் நிரந்தரமாகி விட்டால், அகற்றுவது இயலாத காரியமாகி விடும். ஆரம்பத்திலேயே அவற்றை அனுமதிக்காமல், உடனுக்குடன் அப்புறப்படுத்த இரு அரசு துறையினரும் இணைந்து செயலாற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us