ADDED : ஜன 23, 2026 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வை, 35,711 மாணவர்களும், பத்தாம் வகுப்பு தேர்வை, 37,883 மாணவர்களும் எழுத உள்ளனர்.
செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரியில் துவங்குகின்றன. பிளஸ்2 செய்முறைத் தேர்வுகள், பிப். 9-ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரையும், பிளஸ்1 மாணவர்களுக்கு பிப். 15-ம் தேதி துவங்கி, 21-ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப். 23-ம் தேதி துவங்கி, 28-ம் தேதியும் நிறைவடைகின்றன. இந்நிலையில், தேர்வு பணிகளை வட்டாரத்திற்குள் ஒதுக்க வேண்டுமென, ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

