/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் பற்றாக்குறை கண்டித்து சாலை மறியல்
/
குடிநீர் பற்றாக்குறை கண்டித்து சாலை மறியல்
ADDED : மார் 19, 2024 12:53 AM
அன்னூர்;குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து, கீரணத்தத்தில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீரணத்தம் அருகே கல்லுக்குழி பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இங்கு கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 1200 தூய்மை பணியாளர்கள் வசித்து வருகின்றனர்.
இங்கே கடந்த 13 நாட்களாக, குடிநீர் சப்ளை ஆகவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியை சேர்ந்த 200 பேர், நேற்று மாலை கல்லுக்குழி பஸ் ஸ்டாப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் பேச்சு நடத்தி விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக. உறுதி அளித்தனர்.
இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர். மறியலால் ஒன்றே கால் மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

