sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிநீர் பற்றாக்குறை கண்டித்து சாலை மறியல்

/

குடிநீர் பற்றாக்குறை கண்டித்து சாலை மறியல்

குடிநீர் பற்றாக்குறை கண்டித்து சாலை மறியல்

குடிநீர் பற்றாக்குறை கண்டித்து சாலை மறியல்


ADDED : மார் 19, 2024 12:53 AM

Google News

ADDED : மார் 19, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்;குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து, கீரணத்தத்தில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கீரணத்தம் அருகே கல்லுக்குழி பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இங்கு கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 1200 தூய்மை பணியாளர்கள் வசித்து வருகின்றனர்.

இங்கே கடந்த 13 நாட்களாக, குடிநீர் சப்ளை ஆகவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியை சேர்ந்த 200 பேர், நேற்று மாலை கல்லுக்குழி பஸ் ஸ்டாப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் பேச்சு நடத்தி விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக. உறுதி அளித்தனர்.

இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர். மறியலால் ஒன்றே கால் மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.






      Dinamalar
      Follow us